Home மலேசியா அரசியல் பெரிக்காத்தானுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி ஒத்துழைக்கும் என கூறுவதற்கு தக்கியுடினுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை-...

பெரிக்காத்தானுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி ஒத்துழைக்கும் என கூறுவதற்கு தக்கியுடினுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை- முஹிடின் யாசின்

கோத்தா பாரு, நவம்பர் 15 :

15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணியுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ, அறிவிப்புகள் வெளியிடுவதற்கோ பாஸ் கட்சியின் தலமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசனுக்கு பெரிக்காதான் நேஷனல் எந்த அதிகாரத்தையே அல்லது அனுமதியையோ வழங்கவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் GE15ல் போட்டியிடுவதன் நோக்கம், தேசிய முன்னணி அல்லது பக்காத்தான் ஹராப்பானில் சேராமல் சொந்தமாகவே அரசாங்கத்தை அமைப்பதே ஆகும்.

மேலும் மத்திய அரசை அமைப்பதற்கு போதுமான இடங்களை தமது கட்சி வெல்வது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பெரிகாடன் தலைவர் என்ற முறையில், GE15 க்குப் பிறகு ஒரு அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்காக தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தக்கியுடினுக்கு எந்த ஆணையையும் வழங்கவில்லை.

“இறைவனின் ஆசியுடனும், மக்களின் வலுவான ஆதரவுடனும், பெரிகாத்தான் நேஷனல் இந்த 15வது பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தையும் மாநில அரசாங்கங்களையும் அமைக்க போதுமான இடங்களை வெல்ல வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 14) நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், தேர்தலுக்கு பின்னர் பெரிக்காத்தான் நேஷனலுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க தேசிய முன்னணி ஒத்துழைக்க தயாராக உள்ளது என தக்கியுடின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version