Home மலேசியா GE-15: PN, பாஸ், GPS தலைவர்கள் அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கின்றனர்

GE-15: PN, பாஸ், GPS தலைவர்கள் அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கின்றனர்

கோலாலம்பூர்: பெரிகாத்தான் நேஷனல் (PN), பாஸ் மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் இன்று கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஆலோசித்தனர்.

இன்று காலை சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி அபாங் ஓபங் மற்றும் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் வருகைக்கு பின்  பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இந்த விஷயத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

மத்திய அரசு அமைப்பது குறித்து ஆலோசிக்கவே இந்த பயணம் என்றார். ஒத்த கருத்துள்ள மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில், “கடவுள் விரும்பினால், விரைவில் மத்திய அரசு அமையும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version