Home மலேசியா மெலாவத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுந்தது

மெலாவத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுந்தது

கோல சிலாங்கூர்: புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 50 ஆண்டுகள் பழமையான மரமொன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விழுந்ததாக நம்பப்படுகிறது.

புக்கிட் மெலாவத்தி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்கிஃப்லி கூறுகையில், காலை 7 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து தனக்கு முன்னதாகவே தகவல் கிடைத்தது. கண்காணிப்பு பணியை செய்ய  வேண்டியிருந்த்தால் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஊழியர் ஒருவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தச் சம்பவம் மண் அரிப்பு மற்றும் மண் நகர்வை ஏற்படுத்தியது.சமீபத்தில் பெய்த மழைக்காலம் மண் உறுதியற்றதாக மாறியிருக்கலாம். மேலும், இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க, பழமையான மரங்களின் கிளைகளை முன்கூட்டியே வெட்டியிருக்க வேண்டும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜுவைரியா கூறுகையில், தீயணைப்பு வீரர்கள், மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) மற்றும் கோலசிலாங்கூர் நகராண்மைக்கழகம்  ரேபிட் ஸ்குவாட் ஆகியவை  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், தற்போது புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக சுத்தம் மற்றும் பழுதுபார்க்கும் நோக்கத்திற்காக மூடப்பட்டுள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version