பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று (நவம்பர் 27) புத்ராஜெயாவில் அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார், இந்தக் கூட்டத்தில் மக்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு, புத்ராஜெயாவில் அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்படவுள்ளது, அதில் மக்களுக்கு சுமையாக இருக்கும் வாழ்க்கை செலவினங்களை குறைப்பது பற்றி பேச இருப்பதாக புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.