Home மலேசியா தீ விபத்தில் இருந்து உடன்பிறப்புகளை காப்பாற்றிய 8 வயது டேனிஷ்: Hang Tuah விருது...

தீ விபத்தில் இருந்து உடன்பிறப்புகளை காப்பாற்றிய 8 வயது டேனிஷ்: Hang Tuah விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: ஜூன் 29 அன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தனது உடன்பிறந்தவர்களைக் காப்பாற்றியதற்காக, குளுவாங்கை சேர்ந்த எட்டு வயது பள்ளிச் சிறுவன் டேனிஷ் ராய்கல் ஃபிர்தௌஸுக்கு, துணிச்சலுக்கான ஹாங் துவா பதக்கம் இன்று வழங்கப்பட்டது.

தேசிய குழந்தைகள் தின விழாவில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இந்த விருதை வழங்கினார்.

அவசரநிலை, பேரிடர் அல்லது விபத்துகளின் போது உயிர்கள் மற்றும் உடைமைகளை காப்பாற்றுதல் போன்ற சிறந்த துணிச்சலான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

டேனிஷ் ரெய்கல் 8, தனது சகோதரன் மற்றும் சகோதரியான டேரிஷ் ரிஸ்கே  6, மற்றும் நூர்தியா டெலிஷா, 4, ஆகியோரை வீட்டின் தீயில் இருந்து சமையலறைக்கு இழுத்து வந்து உதவிக்கு அழைத்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டனர்.

ஆரம்பத்தில் நான் தீயின் போது என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் என்னை நானே கூட்டிக்கொண்டு உதவி தேடுவதற்கு முன்பு என் சகோதரனையும் சகோதரியையும் சமையலறைக்கு அழைத்துச் சென்றேன் என்று விருதைப் பெற்ற பிறகு அவர் கூறினார். அன்றைய நினைவுகள் இப்போது மங்கலாக இருப்பதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version