மலாக்கா, டிசம்பர் 1 :
கடந்த வாரம் ஒரு வணிக வளாகத்தில் மொத்தம் RM1,256.60 மதிப்பிலான ஆண்களின் உள்ளாடைகள் உள்ளிட்ட உடைகளைத் திருடிய குற்றச்சாட்டில், மூன்று குழந்தைகளின் தாய் ஒருவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஃபாரா முனிரா ஜஹாரி, 34, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷர்தா ஷியென்ஹா முகமட் சுலைமான் முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் நவம்பர் 24 அன்று நண்பகல் 1.50 மணியளவில், மலாக்கா நகரில் உள்ள ஏயோன் மாலுக்குச் சொந்தமான ஏழு ஜோடி கால்சட்டைகள், மூன்று ஆண்களின் உள்ளாடைகள் என மொத்த மதிப்பு RM1,256.60 ஆடைகளை மோசடியாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரே குற்றத்தில் தொடர்புடைய இரண்டு முந்தைய பதிவுகள் இருப்பதால், தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் ஷரினா ஃபர்ஹானா நோர் சாரி வழக்குத் தொடர்ந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.