Home மலேசியா பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சூதாட்ட நிதி பயன்படுத்தப்பட்டதா? ஆதாரத்தைக் காட்டுங்கள் இல்லையேல் சட்ட நடவடிக்கையை...

பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சூதாட்ட நிதி பயன்படுத்தப்பட்டதா? ஆதாரத்தைக் காட்டுங்கள் இல்லையேல் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்கிறது PAS

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6 :

நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில், “பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சூதாட்ட நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்” என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பாஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அன்வாரின் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் வழங்கப்படாவிட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் ஆய்வு செய்யும்” என்று PAS கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பெரிக்காத்தான் நேஷனல் பிரச்சாரத்திற்கு சூதாட்ட நிறுவனங்கள் நிதி ஆதரவு அளித்தன என்ற பிரதமரின் அவதூறான குற்றச்சாட்டினால் பாஸ் மிகுந்த கவலையடைந்துள்ளது” என்று தக்கியுடின் மேலும்  கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version