புத்ராஜெயா, டிசம்பர் 8 :
இன்று ஶ்ரீ பெர்டானாவில் உள்ள தமது அதிகாரப்பூர்வ குடியிருப்பில், தாய்லாந்து துணைப் பிரதமர் ஜெனெரல் ப்ராவிட் வொங்சுவானை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
ப்ராவிட்டின் மலேசியாவுக்கான இந்தச் சிறப்பு பயணத்தின்போது, அவருடன் தாய்லாந்து தற்காப்பு துணை அமைச்சர் ஜென் ச்சைச்சான் ச்சங்மொங்கொலும் உடன் வந்திருந்தார்.
நண்பகல் சுமார் 12 மணிக்கு ஶ்ரீ பெர்டானா வந்தடைந்த ப்ராவிட் மற்றும் அவரின் தூதர் குழுவை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசூதியோன் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.
இச்சந்திப்பின்போது ப்ராவிட்டும், அன்வாரும் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் கலந்துரையாடினர்.