Home இந்தியா ஓடும் வாடகைக் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதில் 10 மாதக் குழந்தை மரணம் ; தாய் மானபங்கம்

ஓடும் வாடகைக் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதில் 10 மாதக் குழந்தை மரணம் ; தாய் மானபங்கம்

இந்தியாவில் ஓடும் வாடகைக் காரிலிருந்து பத்து மாத குழந்தை ஒன்று தூக்கி எறியப்பட்டதில், அது பரிதாபமாக உயிரிழந்தது . வாடகைக் காரிலிருந்த குழந்தையின் தாயார் மானபங்கம் செய்யப்பட்டு, அவரும் வாகனத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டதால் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா அருகே உள்ள மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண் அவருடைய குழந்தையுடன் ஒரு வாடகைக் காரில் ஏறினார். அந்த வாகனத்தில் மற்ற பயணிகளும் இருந்ததாக அவர் கூறினார். வழியில் வாடகைக் கார் ஓட்டுநரும் மற்ற பயணிகளும் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதாக அவர் குறிப்பிட்டார். தான் மறுத்தபோது, தன்னுடைய குழந்தையை தன்னிடமிருந்து பறித்து, அதை வேகமாக சென்றுகொண்டிருந்த வாகனத்திலிருந்து வெளியே விட்டெறிந்ததாக கூறப்பட்டது.

குற்றவாளிகளை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version