Home மலேசியா பிரதமரை பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் சந்தித்தார்

பிரதமரை பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் சந்தித்தார்

புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சகத்தில் இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை, பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லி சந்தித்தார்.

இந்த சந்திப்பில் மாநில மேம்பாடு தொடர்பான விவகாரங்கள் குறித்து தாம் கலந்துரையாடியதாக பெர்லிஸ் மந்திரி பெசார் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், நடந்த இந்தச் சந்திப்பு சுமூகமாக நடந்ததாக முகமட் ஷுக்ரி கூறினார்.

பெர்லிஸ் மாநில அரசாங்கச் செயலாளர், டத்தோ ஶ்ரீ ஹஸ்னோல் சம் சம் அஹ்மட்டும் மாநில நிதி அதிகாரி துவான் செப்ரி சாஹட்டும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version