Home மலேசியா பத்தாங்காலி நிலச்சரிவு; மகன் மீட்கப்பட்ட வேளையில் மனைவியை காணாமல் தவிக்கும் கணவர்

பத்தாங்காலி நிலச்சரிவு; மகன் மீட்கப்பட்ட வேளையில் மனைவியை காணாமல் தவிக்கும் கணவர்

பத்தாங்காலி நிலச்சரிவுக்குப் பிறகு லிம் முன் சியோங்கின் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணையுமா என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. அவரது மனைவியும் மகனும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்மில் முகாம் பயணத்திற்காக தங்கள் மகனின் சகாக்களுடன் சேர்ந்து  சென்றார். அவரது மகன் 19, அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவரது 44 வயது மனைவியை இன்னும் காணவில்லை.

லிம்மின் நண்பர், பெயர் குறிப்பிட விரும்பாதவர் அவருடன் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு வந்தார். நிலச்சரிவில் லிம்மின் மகனுக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. செய்தி கிடைத்ததும் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்காக அப்பெண்ணின் சகோதரி ஈப்போ, பேராக் நகரிலிருந்து மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாக நண்பர் கூறினார்.

அவரது மனைவியைப் பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், லிம் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்க முடிவு செய்தார். இருப்பினும், அவருக்கு விஷயங்கள் நிச்சயமற்றதாக இருப்பதால், அவர் நேர்காணல் வழங்க  மறுத்துவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version