Home மலேசியா மரம் விழுந்ததில் 55 வயது மாது பலி

மரம் விழுந்ததில் 55 வயது மாது பலி

சபாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையுடன் கூடிய மோசமான வானிலையால், ஜாலான் துன் ஃபுவாட் ஸ்டீபன் பகுதியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, இதன்போது மரம் விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், பலியானவர் கதிசா ஜுவானி (55) என அடையாளம் காணப்பட்டார் என்றும், அவர் மீது விழுந்த மரம் மூன்று வீடுகளையும் சேதப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

“அந்த பெண்மணி சம்பவத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், அவரது சடலம் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று, இன்று செய்தியாளர்களை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

Previous articleகோவிட் பாதிப்பு 858- இறப்பு 3
Next articleதேடப்படும் மலேசிய தொழிலதிபர் எங்கு நாடு கடத்தப்படுவார் என்பதை தாய்லாந்து நீதிமன்றம் முடிவு செய்யும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version