Home மலேசியா பத்தாங்காலி நிலச்சரிவு: கடைசியாக பலியான 11 வயது சிறுவனின் உடலை குடும்பம் உரிமை...

பத்தாங்காலி நிலச்சரிவு: கடைசியாக பலியான 11 வயது சிறுவனின் உடலை குடும்பம் உரிமை கோரியது

சுங்கை பூலோ: ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடைசியாக பலியான 11 வயது சிறுவனின் உடல் குடும்ப உறுப்பினர்களால் உரிமை கோரப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) காலை 11 மணியளவில், குடும்ப உறுப்பினர்கள் இங்குள்ள சுங்கை பூலோ மருத்துவமனைக்கு வருவதைக் காண முடிந்தது.

அவர்கள் ஊடகங்களிடம் பேச மறுத்து விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நிர்வாணா இறுதி சடங்கு அறையின் சின்னம் தாங்கிய வேனுடன் அவர்கள் புறப்பட்டனர்.

சனிக்கிழமை (டிசம்பர் 24) இறுதி உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version