Home மலேசியா மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் SOPயில் மாற்றம் இல்லை: சைபுடின்

மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் SOPயில் மாற்றம் இல்லை: சைபுடின்

நாட்டின் அனைத்து அனைத்துலக நுழைவாயில்களில் கோவிட்-19 தொடர்பான எந்தவொரு புதிய செயல்பாட்டு தர விதிமுறைகளும் அமல்படுத்தப்படாது என்று, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சிலாங்கூர், சிப்பாங்கிலுள்ள, கே.எல்.ஐ.ஏ அனைத்துலக புறப்பாடு மற்றும் வந்தடையும் செயல்பாட்டுப் பகுதிகளை பார்வையிட்டப் பின்னர், சைஃபுடின் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

அரசாங்கம், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், எப்போதும் கோவிட்-19 நோய்த் தொற்று குறித்த அண்மைய நிலவரத்தையும், புதிய தரவுகளையும் தமது அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version