Home மலேசியா சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 24 வியட்நாமிய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 24 வியட்நாமிய மீனவர்கள் கைது

கடந்த வியாழன் அன்று, மலேசியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு படகுகளில் இருந்த 24 வியட்நாமிய நாட்டு மீனவர்களை மலேசிய கடல்சார் அமலாக்கத்துறையினர் (MMEA) கைது செய்துள்ளது.

தோக் பாலி முகத்துவாரத்திலிருந்து 90- 106 கடல் மைல்களுக்கு இடையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக கிளாந்தான் MMEA இயக்குனர், கடல்சார் கேப்டன் ,சையத் நோர் அட்லி சையத் அப் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் 1,200 லிட்டர் டீசல் எண்ணெய் உட்பட அவற்றின் மொத்த மதிப்பு RM1.66 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version