நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர், நேற்று பண்டார் அல் முக்தாபி பில்லா ஷா (AMBS) அருகே உள்ள சுங்கை உலு பாக்காவில் மீன்பிடிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
முஹமட் சுஹைலி ரோஸ்லான் (20) என்பவர், நேற்று நண்பகல் 1 மணியளவில் தனது நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் அங்குள்ள சிற்றோடையைக் கடந்தபோது, ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
“பாதிக்கப்பட்டவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும், மீட்புப் பணிகள் தீயணைப்புத்துறையினதுடன் சேர்ந்து, காவல்துறை மற்றும் கிராம மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.