கோலாலம்பூர்: இன்று காலை 8.34 மணியளவில் சுலவேசியின் மினாஹாசா தீபகற்பத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் கொரண்டலோவில் இருந்து தென்கிழக்கே 69 கிலோமீட்டர் தொலைவில் 146 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.