Home மலேசியா ஜோகூர், மூவாரில் மீண்டும் வெள்ளம்

ஜோகூர், மூவாரில் மீண்டும் வெள்ளம்

ஜோகூரின் மூவார் மாவட்டத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) தெரிவித்துள்ளது.

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கு தற்காலிக நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜோகூர், பகாங் மற்றும் சபா ஆகிய மூன்று மாநிலங்களிலும் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 3 மணி நிலவரப்படி குறைந்துவருகிறது.

ஜோகூரிலுள்ள மொத்தம் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை அங்குள்ள மொத்தம் 7 நிவாரண மையங்கள் மூடப்பட்டுள்ளன, மற்றும் 29 நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளன என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version