Home Top Story பெருவில் மலையில் இருந்து உருண்டு விழுந்த சுற்றுலா பேருந்து : 25 பேர் உயிரிழப்பு

பெருவில் மலையில் இருந்து உருண்டு விழுந்த சுற்றுலா பேருந்து : 25 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து, அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான டம்ப்ஸ் நகருக்கு 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்தது.

இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version