நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) அதிகாலை 3 மணியளவில் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 17 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்தார்.
“சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 64 இன் கீழ் குறித்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் “மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் ஓட்டுனர்கள் ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக அம்பாங் ஜெயா BSPT தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டன,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.