Home மலேசியா ஒற்றுமை அரசாங்கம் 2023 க்காக RM388.1 பில்லியன் பட்ஜெட் தாக்கல்

ஒற்றுமை அரசாங்கம் 2023 க்காக RM388.1 பில்லியன் பட்ஜெட் தாக்கல்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசு இன்று 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் RM289.1 பில்லியன் இயக்கச் செலவினங்களுக்காகவும், RM99 பில்லியன் தற்செயல் சேமிப்புக்காக RM2 பில்லியன் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், விரிவடையும் நிதிக் கொள்கையின்படி, வளர்ச்சிக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு RM71.6 பில்லியனுடன் ஒப்பிடும்போது RM97 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு கவனம் செலுத்துவதற்கும், பொது உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வசதிகளை சரிசெய்வதற்கும் இந்த அதிகரிப்பு உள்ளது.

அரசு கொள்முதல் நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு, இந்த உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு முழுமையாக மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்யும் போது கூறினார்.

அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். பிரதமர்  டத்தோஸ்ரீ இஸ்மாய் சப்ரி யாக்கோபின் முந்தைய அரசாங்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் மொத்தம் RM372.3 பில்லியன் ரிங்கிட் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால் அது விவாதம் மற்றும் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 15ஆவது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதாரம், நிறுவன சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நிர்வாகம் மற்றும் ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் சமூக நீதி ஆகிய மூன்று நோக்கங்களை டிப்படையாகக் கொண்ட 12 முக்கிய முன்முயற்சிகளில் கவனம் செலுத்தும் மலேசியா மதானி மேம்பாட்டு கட்டமைப்பை ஆராய்வதற்கான முதல் படியாக பட்ஜெட் 2023 இருக்கும் என்று அன்வார் கூறினார்.

தேசியக் கடனைக் கையாள்வது உட்பட நிதி நிலையைக் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து ஆதரிக்கவும் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

மதானி பட்ஜெட் என்று பெயரிடப்பட்டுள்ள இன்றைய பட்ஜெட் தாக்கல் உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உன்னத மதிப்பு அமைப்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

இந்த ஆகஸ்டு மாதத்தில் மக்களின் குறைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்த பின்னர், உண்மைகள் மற்றும் உண்மையான எண்களை முன்வைத்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்தேன்.

2022ல் 5.6% இருந்த நிதிப்பற்றாக்குறையை 2023இல் 5%குறைக்கும் என்று அன்வார் கூறினார். தொடர்ச்சியான வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு உட்பட்டு 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.2% இலக்குடன் நடுத்தர காலத்தில் நிலையான நிரந்தர பற்றாக்குறை நிலையை அடைய அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version