Home மலேசியா சபாவில் திடீர் வெள்ளம்; 464 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சபாவில் திடீர் வெள்ளம்; 464 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சபாவின் கோத்தா மருது மற்றும் தோங்கோட் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 166 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக சபா பேரிடர் முகாமைத்துவக் குழுவின் செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குறித்த இரு மாவட்ட்ங்களின் பகுதிகளில் சில வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இருப்பினும், சபாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை வானிலை நன்றாக இருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version