ஆயிர் ஈத்தாமில் வெள்ள நிலைமை மோசமாகி வருகிறது என்று டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (மார்ச் 4) நண்பகல் நிலவரப்படி 1,315 குடும்பங்களைச் சேர்ந்த 4,539 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் அனைவரும் தங்குவதற்கு அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் வீ தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இப்போது மேலும் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்படும்,” என்று ம.சீ.ச தலைவர் மேலும் கூறினார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) புதிதாக திறக்கப்பட்ட நிவாரண மையங்களுக்கு அவரும் யோங் பெங் மாநில சட்டமன்ற உறுப்பினர் லிங் தியான் சூனும் வருகை தருவார்கள் என்றும் வீ கூறினார்.