Home மலேசியா வெள்ளம் காரணமாக மூவார் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

வெள்ளம் காரணமாக மூவார் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

மூவாரிலுள்ள பஞ்சோர் காவல் நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், அதன் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணியளவில் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, இன்று சனிக்கிழமை (மார்ச் 4) காலை 10 மணி முதல் பஞ்சோர் காவல் நிலையம் தற்காலிகமாக நடவடிக்கைகளை நிறுத்தியதாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரைஸ் முஃஹ்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை (மார்ச் 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ஏதேனும் முக்கியமாக காவல்துறையினரால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளவர்கள் அருகிலுள்ள மற்ற காவல் நிலையங்களுக்குச் செல்லலாம்” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version