Home மலேசியா ஒற்றுமை அரசாங்கம் கவிழும் என்று கூறிய ஹாடி அவாங் மீது நடவடிக்கை எடுப்பீர்; ராயர் மக்களவையில்...

ஒற்றுமை அரசாங்கம் கவிழும் என்று கூறிய ஹாடி அவாங் மீது நடவடிக்கை எடுப்பீர்; ராயர் மக்களவையில் கோரிக்கை

கோலாலம்பூர்: அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் அப்துல் ஹாடி அவாங் (PN-Marang) மீது விசாரணை நடத்துமாறு RSN Rayer (PH-Jelutong) உள்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்கா, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், குற்றவியல் சட்டத்தின் 124பி பிரிவின் கீழ் ஹாடி விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஒற்றுமை அரசாங்கம் மன்னரால் ஆணையிடப்பட்ட ஒன்றாகும் என்று அவர் மக்களவையில் கூறினார். ஹாடியின் கருத்துக்கள் மாமன்னருக்கு எதிரான தேசத்துரோகம்  என்று விவரித்தார். தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான திட்டங்களை வகுக்க எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமையும் இருப்பதாகவும், அவ்வாறு செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஹாடி கூறியதாக ஒரு இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி, “தேர்தல்கள் மூலம் மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும்” புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும், ஜனநாயக நாட்டில் இது சகஜம் என்றும் கூறினார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவின் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் நடக்கும் என்ற கருத்தை நிராகரித்த ஹாடி, ஜனநாயக நாட்டில் மாற்றங்களை மாமன்னரால் தடுக்க முடியாது என்றார்.

ஹாடியை விசாரிக்க வேண்டும் என்ற ராயரின் கோரிக்கை மக்களவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு சலசலப்பைத் தூண்டியது. மிஸ்பாஹுல் முனிர் மஸ்துகி  (PN-Parit Buntar) ஹாடியின் பாதுகாப்பிற்கு வந்தார், பாஸ் தலைவர் ஒரு அரசியல் அறிக்கையை மட்டுமே செய்கிறார் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ராயர், ஹாடியின் அறிக்கை அத்தகைய திட்டங்களின் ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்றார். ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் கூறினார்.

க்ளிர் முகமட் நோர் (PN-Ketereh) ராயர், அரசாங்கத்தை கவிழ்க்க இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதாரம் இருந்தால் ஹாடிக்கு எதிராக போலீஸ் புகாரை பதிவு செய்யுமாறு சவால் விடுத்தார். இரு தரப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் தொடர்ந்தன. துணை சபாநாயகர் ஆலிஸ் லாவ் அவர்களின் ஒலிவாங்கிகளை முடக்கி, அவர்களை  கோபப்பட வேண்டாம் என்று கூறினார்.

Che Zulkifly Jusoh (PN-Besut) பின்னர் ஸ்டாண்டிங் ஆர்டர் 23(1)(i)ஐ மேற்கோள் காட்டினார். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் துல்லியம் குறித்து விசாரிக்கப்படக்கூடாது என்று கூறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வாதிட்டனர். ஆனால் ஒழுங்கை மீறி பேசும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று லாவ் உறுதியாகக் கூறியதால் பேச்சு நிறுத்தப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version