பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளும் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிடுவதைத் தவிர்க்க ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன.
பினாங்கு பக்காத்தான் ஹரப்பான் தலைவர் சௌ கோன் இயோவ் கூறுகையில், நேற்று நடைபெற்ற இரு கூட்டணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் 15 மலாய்க்காரர்கள் பெரும்பான்மை இடங்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், இதில் பல ஒப்பந்தங்களும் எட்டப்பட்டதாகவும் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மலாய்க்காரர்களின் பெரும்பான்மை இடங்களைப் பற்றி மட்டுமே இருந்ததால், தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்று பினாங்கு முதல்வருமான அவர் கூறினார்.
இரு கட்சிகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும், பதவியில் இருப்பவர்களுக்கு தங்கள் ஆசனங்களைப் பாதுகாக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தேவையான அளவுகோல்களைப் பொறுத்து அவை பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணிகள் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை என்பதால், தேர்தலுக்கு முன் வேறு பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும், விவாதத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்தும் அந்தந்த கட்சிகளுக்கு மேலும் செம்மைப்படுத்துவதற்காக திரும்ப எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சோ கூறினார்.
PH-BN போட்டியிடும் அனைத்து இடங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் விவாதங்கள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.