Home மலேசியா ஆசிரியர்களின் தேவை எவ்வளவு என்பது எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்கிறார் காலிட்

ஆசிரியர்களின் தேவை எவ்வளவு என்பது எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்கிறார் காலிட்

கோத்தா டிங்கி: வருங்காலத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதைச் சமாளிக்க எத்தனை ஆசிரியர்கள் தேவை என்ற முன்னறிவிப்பு தயாரிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறுகிறார். ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) கல்வி மையங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வி அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் தேவைப்படும் ஆசிரியர்களைப் பற்றிய அவர்களின் முன்னறிவிப்பைப் பெற கல்வி அமைச்சுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம், இதன் மூலம் இந்த விஷயத்தை நாங்கள் தீர்க்க முடியும். TVETஆசிரியர்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு Universiti Pendidikan Sultan Idris (UPSI)  கூறியுள்ளேன் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version