Home மலேசியா 1,500 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய போலீஸ் சார்ஜெண்ட் ஒருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

1,500 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய போலீஸ் சார்ஜெண்ட் ஒருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

அலோர் ஸ்டார்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சமாக RM1,500 வாங்கியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட போலீஸ் சார்ஜென்ட் ஒருவருக்கு RM3,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால் 6 மாத சிறைத்தண்டனை என முஹமட் ஃபிட்ரி இஸ்மாயில் 32, குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி ரோஹத்துல் அக்மர் அப்துல்லா, தண்டனை விதித்தார்.

இப்போது லங்காவி காவல்துறையில் பணியாற்றி வரும் முஹமட் ஃபிட்ரி, நவம்பர் 11, 2020 அன்று இரவு 11.34 மணியளவில் குபாங் பாசு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் பிரதான நுழைவு வாயிலில் ஒரு நபரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை அரசு வழக்கறிஞர் ரெஹாப் அப்துல் ஷுக்கூர் வழக்கு தொடர்ந்தார்.குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் முகமட் கைருல் ஹபிசுதீன் ரம்லி ஆஜரானார். முஹமட் ஃபிட்ரி பின்னர் நிர்ணயிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தியது புரிந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version