சுங்கை சிப்பாங் கெச்சில் என்ற இடத்தில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) பிற்பகல் 2.34 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர், வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
“சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததும், உடனடியாக தீயணைப்பு இயந்திரம் மற்றும் ஆறு பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“எங்கள் சோதனைகளின் அடிப்படையில், ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சகோதரிகள் அங்கு நீந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் நீரில் மூழ்கியதாகவும், அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் அவர்களைக் காப்பாற்ற முயன்றார்.
அவரால் ஒன்பது வயது சிறுமியை ஆற்றிலிருந்து வெளியே இழுக்க முடிந்தது, ஆனால் இளைய பெண்ணை வெளியே இழுக்க முயன்றபோது அந்த நபர் காணாமல் போனார் என்றார்.
ஆனாலும் “ஒன்பது வயது சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் அவரது தங்கையின் உடல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
“முகமட் பைசல் என அடையாளம் காணப்பட்ட 30 வயது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.