Home இந்தியா இந்திய ரயில் விபத்திற்கு பிரதமர் தம்பதியர் இரங்கல்

இந்திய ரயில் விபத்திற்கு பிரதமர் தம்பதியர் இரங்கல்

கோலாலம்பூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடந்த சோகமான ரயில் விபத்து பற்றிய செய்தியால் நானும் அசிஸாவும் மிகவும் வருத்தமடைந்தோம்.

மலேசியாவின் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

இந்த கடினமான நேரத்தில் மலேசியாவின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்தியாவுடன் இருப்பதாக அன்வார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செய்தி அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை ரயில் மோதி குறைந்தது 300 உயிர்களைக் கொன்றது மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version