Home மலேசியா பாகன் டத்தோ பாலத்தில் விரிசலா?

பாகன் டத்தோ பாலத்தில் விரிசலா?

கடந்த வாரம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட பாகன் டத்தோ-சேஜாகோப் பாலத்தில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது போல, மலிவான மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதால் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுவின் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் கூறினார்.

வீடியோவில் கூறப்பட்ட விரிசல் உண்மையில் கான்கிரீட் விரிவாக்கம் மற்றும் சுருக்கம் செயல்முறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பாலத்தின் மேம்பாடு குறித்த துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை ஒத்துழைக்கவும் சரியான தகவல்களை வழங்கவும் பொதுப்பணித்துறை எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாலத்தின் அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கீழே உள்ள பேராக்ஆற்றை பார்க்க முடிகிறது எனக் கூறி 26 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

பாகன் டத்தோ-சேஜாகோப் பாலம் மே 31 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version