Home மலேசியா வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கான மூன்றாம் கட்ட பண உதவி தியாகத் திருநாளுக்கு முன் வழங்கப்படும் -பிரதமர்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கான மூன்றாம் கட்ட பண உதவி தியாகத் திருநாளுக்கு முன் வழங்கப்படும் -பிரதமர்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கான (B40) ரஹ்மா பண உதவியின் (STR) மூன்றாம் கட்டம் தியாகத் திருநாள் (Hari Raya Haji) கொண்டாட்டத்திற்கு முன் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள எட்டு மில்லியன் பெறுநர்கள் பயன்பெறும் வகையில் RM2 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மேலும், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு e-Tunai Belia Rahmah திட்டத்தின் கீழ் RM200 இம்மாதம் மூன்றாவது வாரத்திற்கு முன்பாக வழங்கப்படும்,” என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version