Home மலேசியா பல்கலைக்கழகப் பதிவுக்கு செல்லும் வழியில் மகன் பலி; தாய் உள்ளிட்ட 4 பேர் காயம்

பல்கலைக்கழகப் பதிவுக்கு செல்லும் வழியில் மகன் பலி; தாய் உள்ளிட்ட 4 பேர் காயம்

ஈப்போ: கோப்பெங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM301.5 இல் இன்று அதிகாலை நடந்த விபத்தில் பல்கலைக்கழகப் பதிவுக்கு செல்லும் வழியில் மகன் (மாணவர்) பலியானதோடு தாய் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் Proton Savy  மற்றும் டிரெய்லர் சிக்கின.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு காலை 6.18 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோப்பெங்கில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது, வந்தவுடன், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காரில் இருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் டிரெய்லர் டிரைவர் காயமின்றி தப்பினார் என்று அவர் கூறினார்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இங்குள்ள ராஜா பெர்மைசூரி மருத்துவமனைக்கு (HRPB) கொண்டு செல்லப்பட்டனர், மேலும் இறந்தவர் பிரேத பரிசோதனைக்காக அங்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார். மீட்புபணி காலை 8.02 மணிக்கு முடிந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version