Home மலேசியா ஹஜ்ஜுப் பெருநாளுடன் இணைந்து சிறைக் கைதிகள் விடுதலை

ஹஜ்ஜுப் பெருநாளுடன் இணைந்து சிறைக் கைதிகள் விடுதலை

ஹஜ்ஜுப் பெருநாளுடன் இணைந்து Ihsan Madani Prisoners’ Release on Licence (OBB) திட்டத்தின் கீழ் லாபுவான் சிறையில் இருந்து ஒன்பது முஸ்லிம் கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் லாபுவானைச் சேர்ந்தவர்கள் என்று லாபுவான் சீர்திருத்த மைய இயக்குநர், துணை ஆணையர் கல்பின் முகமட் சைட் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட கைதிகளில் 6 பேரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் சிறை வளாகத்திற்கு வெளியே சந்தித்தனர், மீதமுள்ள மூன்று பேர் அவரவர் முதலாளிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இன்றைய நிலவரப்படி, OBB-யின் கீழ் இதுவரை 21 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர், ஹரி ராயா ஐடில்பித்ரியுடன் இணைந்து, கடந்த ஏப்ரல் 19 முதல் தொகுதியில் ஆறு கைதிகள் விடுவிக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து காமாடன் திருவிழாவில் மேலும் ஆறு பேர் விடுவிக்கப்பட்டனர், தற்போது மூன்றாவது குழுவில் இன்று ஒன்பது பேர் விடுக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

“விடுவிக்கப்பட்ட அனைவரும் தங்களின் தண்டனைக் காலத்தின் மூன்றில் ஒரு பங்கை அனுபவித்து விட்டார்கள் என்றும் அவர்கள் ஓரிரு மாதங்களில் விடுதலை செய்யப்பட இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version