Home மலேசியா தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள வீட்டின் படுக்கையறையில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு

தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள வீட்டின் படுக்கையறையில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு

ஜாலான் SG 7/4, தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்றுக் காலை 10.26 மணிக்கு தமது துறைக்கு தகவல் கிடைத்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர், வான் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு, தகவல் கிடைத்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, பூட்டியிருந்த இரண்டு மாடி வீட்டின் கதவைத் திறந்தனர்.

அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக நம்பப்படும் 73 வயதான லூ நியோக் செங் என அழைக்கப்படும் மூதாட்டி அவரது படுக்கையறையில் கிடந்தார்.

பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது சம்பவ இடத்திலிருந்த சுகாதாரத்துறையிம் மருத்துவ உறுப்பினரால் உறுதிசெய்யப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version