Home மலேசியா மட்டிகளை தேடிக் கொண்டிருந்த இருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு பலி

மட்டிகளை தேடிக் கொண்டிருந்த இருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு பலி

கூச்சிங்கில் இன்று செவ்வாய் (ஜூலை 11) அதிகாலையில் வீசிய பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், கம்போங் பன்டலில் உள்ள  Esplanade Buntal கடற்கரையில் மட்டிகளை தேடி கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் கூறியது: முதலில் பலியான முகமது அமின் உமர் (39) என்பவரின் உடல் அதிகாலை 3.30 மணிக்கும், அவாங் கைருல் அசிக் அவாங் சூலா (25) என்பவரின் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.42 மணிக்கும் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நள்ளிரவு 12.47 மணிக்கு மையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆடவர்கள் மற்றொரு நண்பருடன் கடற்கரைக்குச் சென்றனர். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version