கூலாய், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) 29.1 இல் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வியாழன் (ஜூலை 13) பிற்பகல் 2.08 மணியளவில் காரும் லோரியும் மோதி விபத்துக்குள்ளானதாக அவசர அழைப்பு வந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு மீட்பு டெண்டர் வாகனம் மற்றும் அவசர மருத்துவப் பதிலளிப்பு சேவைகளுடன் கூலாய் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடையாளம் தெரியாத லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் காரில் சிக்கிய பாதிக்கப்பட்டவரை மீட்க சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினோம் என்று மீட்பு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மூத்த அதிகாரி II ஃபௌசி சே டெரிஸ் கூறினார்.
காரில் பயணித்த பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு தெரிவித்ததாகவும், 31 வயதான கார் ஓட்டுனர் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கூலாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பௌசி கூறினார். பிற்பகல் 3.12 மணிக்கு மீட்புப்பணி நிறைவடைந்தது.