Home மலேசியா மூவாரில் தனது இரு மகள்களை 6 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு

மூவாரில் தனது இரு மகள்களை 6 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு

மூவாரில் தனது 15 மற்றும் 12 வயது மகள்களை பாலியல் வன்முறை செய்ததாக, ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 53 வயதான ஆடவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2018 முதல், மூவாரிலுள்ள பக்ரி மற்றும் ஜாலான் ஜெராம் தெபியில் உள்ள இரண்டு தனி வீடுகளில், தனது மகள்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

கடைசியாக ஜூலை 9 அன்று நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு மகள்களையும் ஒரே இடம், நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறப்படுகிறது.

இதில் 19 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3) இன் கீழ் உள்ளன, அதே சமயம் 11 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் உள்ளன, அதே சட்டத்தின் பிரிவு 16(1) உடன் படிக்கப்பட்டது.

வழக்கின் அடுத்த செவிமடுப்பிற்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதியை நீதிபதி அபுபக்கர் மனாட் அறிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version