Home Top Story ஜீவிதா, ராஜசேகர் தம்பதிக்கு ஒரு வருடம் சிறை

ஜீவிதா, ராஜசேகர் தம்பதிக்கு ஒரு வருடம் சிறை

ஜீவிதா 1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தும் ரத்த வங்கி குறித்து பல வருடங்களுக்கு முன்பு இருவரும் சர்ச்சை கருத்தை வெளியிட்டனர். நன்கொடையாக பெறப்படும் ரத்தத்தை சிரஞ்சீவி வெளி மார்க்கெட்டில் விற்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த வழக்கை ஐதராபாத் நாம் பள்ளியில் உள்ள 17ஆவது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சாய் சுதா விசாரித்து ஜீவிதா, ராஜசேகர் ஆகியோருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். பின்னர் இருவருக்கும் கோர்ட்டிலேயே அப்பீலுக்கு செல்ல வாய்ப்பு அளித்து ஜாமீனும் வழங்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version