நம்மில் பலருக்கு சதுரங்கம் விளையாடவே தெரியாது. தெரிந்தாலும் தேர்ச்சியாக விளையாட தெரியாது. சிலருக்கு வேகமாக விளையாடத் தெரியாது. அப்படியானால் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாட முடியுமா?
ஆம். முடியும் என நிரூபித்திருக்கிறார் பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் மாணவி புனிதமலர் இராஜசேகர். இவரை கல்வியிலும் சரி இத்தகைய சாதனை புரிவதிலும் சரியாக நெறியாண்டிருக்கிறார்கள் பேராக், மகிழம்பூ தமிழ்ப்பள்ளியினர். இவரை நெறிப்படுத்திய, பயிற்சியளித்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர் என அனைவரையும் தமிழ் சமூகம் வியந்து பாராட்ட வேண்டும்.
ஏனெனில் புனிதமலர் உலக சாதனை, மலேசிய சாதனை என பல சாதனைகளை சாதாரணமாக கடந்து செல்கிறார். இவரை பெற்றெடுத்த தாய்,தந்தையருக்குத்தான் திருவள்ளுவர் “ஈன்ற பொழுதில் பெரிதுவர்க்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என சொல்லிவிட்டாரோ என்னமோ.
இவர் ஆசியாவின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை என்ற விருதை வென்றுள்ளார். மக்கள் ஓசை இவரை நேரடியாக இன்று (ஜூலை 30) சமூக வலைத்தளங்களில் நேரலை செய்தது.
நேர்காணல் -நமது நிருபர் திருமதி.ராமேஸ்வரி ராஜா https://fb.watch/m5DwQiVyV_/?mibextid=cr9u03