கோலாலம்பூர்: கூச்சாய் தொழில்முனைவோர் பூங்காவில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்தன. செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 15) கூரை விழுந்து சேதமடைந்த வாகனங்களைக் காட்டும் பல படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டன.
மாநகர தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, முதற்கட்ட சோதனையில் சம்பவத்தின் போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.