Home மலேசியா பாசீர் பூத்தே பகுதியில் வாகனமோட்டி மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆடவர் கைது

பாசீர் பூத்தே பகுதியில் வாகனமோட்டி மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆடவர் கைது

பாசீர் பூத்தே, கம்போங் டெலிசானில் நேற்று 27 வயது வாகனமோட்டி மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் 45 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் ஐசுல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார். நேற்று காலை 5.55 மணிக்கு மாவட்ட காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது என்றார். ஒருவரால் சுடப்பட்டதில் இடது காலில் காயம் அடைந்த 27 வயது இளைஞரைப் பற்றிய புகார் பெற்றப்பட்டது.

திடீரென்று, மற்றொரு காரில் பயணித்த பலர் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது நண்பரை நோக்கி பல முறை சுட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். குண்டுகள் பாதிக்கப்பட்டவரின் காலில் தாக்கியதாக ஐசுல் கூறினார். சந்தேக நபரும் அவரது நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவர் உடனடியாக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் கோத்த பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version