Home Top Story ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா ? நெல்சன் போட்ட திட்டம்

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா ? நெல்சன் போட்ட திட்டம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளதாகவும் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை நெல்சன் இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

மேலும், ரஜினி- விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும் நேரம் வரும்போது நிச்சயம் செய்வேன் என்று நெல்சன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version