Home மலேசியா அரசியல் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நாளை பதவியேற்பர்

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நாளை பதவியேற்பர்

நெகிரி செம்பிலானின் புதிய ஆட்சிக்குழு (Exco) வியாழக்கிழமை (ஆக. 24) நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பதவியேற்பர். மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஜாஃபிர் இப்ராஹிம் செவ்வாயன்று (ஆகஸ்ட் 23) ஒரு அறிக்கையில், பதவியேற்பு விழா மற்றும் நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தியில் காலை 9 மணிக்குத் தொடங்கும் என்றார்.

இதற்கிடையில், விஸ்மா நெகிரியில் நடைபெறும் முதல் ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பிறகு நாளை மாலை 5 மணிக்கு இலாகா நியமனங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று மந்திரி பெசார் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி முறையே 17 மற்றும் 14 இடங்களில் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது, பெரிக்காத்தான் நேஷனல் ஐந்து இடங்களைப் பிடித்தது. மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன், மாநில அரசு சில Exco இலாகாக்களை மத்திய அரசு பதவிகளுடன் சீரமைப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version