தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரேத்தா தவிசினுக்கு டத்தோஸ்ரீ பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு மலேசியா மற்றும் தாய்லாந்திற்கு இடையே பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தருமாறு அன்வார் ஸ்ரேத்தாவிற்கு அழைப்பு விடுத்தார்.
“மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்தும் வலுப்பெறும் என்று நம்புகிறோம்” என்று அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்,