Home Top Story போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா…. கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்

போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா…. கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் மற்றும் 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய இரண்டாம் சுற்று ஆட்டம் நேற்று டிராவில் முடிந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் இன்று தொடங்கியது .

ஏற்கனவே நடந்த இரண்டு சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டை பிரேக்கர் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் தொடங்கினார் பிரக்ஞானந்தா.

இந்நிலையில் டை பிரேக்கர் முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற கடைசிவரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார் பிரக்ஞானந்தா. தொடர்ந்து டை பிரேக்கரின் 2வது சுற்று போட்டி தொடங்கியது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதைப் போலவே, வந்த பிரக்ஞானந்தா தோல்வியடைந்தாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version