Home மலேசியா அரசியல் ஜோகூர் இடைத்தேர்தலில் பிரச்சாரம், கூட்டங்களுக்கு காவல்துறை ஒப்புதல்

ஜோகூர் இடைத்தேர்தலில் பிரச்சாரம், கூட்டங்களுக்கு காவல்துறை ஒப்புதல்

ஜோகூர் பாரு, பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலுக்கான கூட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கான ஏழு அனுமதிகளை மாநில காவல்துறை அங்கீகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) வரை எந்த விசாரணை ஆவணங்களும் (IP) திறக்கப்படவில்லை என்றும், பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் எந்த ஆத்திரமூட்டலையும் உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் ஜோகூர் காவல்துறையின் இடைத்தேர்தல் செய்தித் தொடர்பாளர்  இப்ராஹிம் மாட் சோம் மேலும் கூறினார்.

பூலாய் தொகுதியை பொறுத்தவரை, கூட்டங்களுக்கு மூன்று அனுமதிகளையும், பிரச்சாரத்திற்கு மூன்று அனுமதிகளையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம். அதே நேரத்தில் சிம்பாங் ஜெராமில்  ஒரு கூட்டத்திற்காக அனுமதியை நாங்கள் அங்கீகரித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்றும், எதிராளியின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை சேதப்படுத்துதல் அல்லது அரசியல் கொடிகளை எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.

அப்போது  இப்ராஹிம், இதுபோன்ற செயல் குற்றம் என்று கூறியதுடன், குற்றவியல் சட்டத்தின் 427ஆவது பிரிவின் கீழ் தவறு செய்ததற்காக நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version