ஜோகூர் பாரு:
ஜோகூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய சமூகம் “கிங்மேக்கர்களாக” இருக்கும் என்று மஇகா எதிர்பார்க்கவில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் டத்தோ எம். அசோஜன் தெரிவித்தார்.
பூலாய் நாடாளுமன்ற தொகுதியில் சிங்கப்பூரில் பணிபுரியும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்றும், அங்கு 20,000 வாக்காளர்களை உள்ளடக்கிய இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அசோஜன் கூறினார்.
“குறித்த தொகுதியில் வாக்களிப்பு விகிதம் என்ற அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜோகூர் மாநிலத் தேர்தலில் 60 சதவீதமும், சமீபத்திய 15வது பொதுத் தேர்தலில் (GE15) 70 சதவீதமும் வாக்களிப்பு ஆகியிருந்தது என்றார் அவர்.
ஒரு இடைத்தேர்தலில், பொதுவாக 60 சதவீத வாக்குகள் எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு இந்திய வாக்காளர்களின் இலக்கு குறைந்தது 50 சதவீதமாக இருந்தால் மட்டுமே அவர்களின் வாக்குகள் வெற்றியை முடிவு செய்யும்விதமாக இருக்கும். ஏனெனில் இது ஒட்டுமொத்த முடிவை பாதிக்காது என்று நம்புகிறேன்,” என்று அவர் நேற்று கூறினார்.
நேற்று ஜோகூர் மஇகா முன்னாள் தலைவர் “பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் முடிவை தீர்மானிப்பார்களா” என்பது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.