Home மலேசியா பூலாய் இடைத்தேர்தல்: 41 பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி

பூலாய் இடைத்தேர்தல்: 41 பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி

ஜோகூர்:

பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில இடைத்தேர்தலுக்கான 41 பிரச்சாரம் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு காவல்துறை அனுமதிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை பெறப்பட்ட மொத்தம் 190 விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 182 விண்ணப்பங்களுக்கு காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளதுடன், இரண்டு நிகழ்வுகளுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று, ஜோகூர் போலீசின் இடைத்தேர்தலுக்கான செய்தித் தொடர்பாளர், இப்ராஹிம் மாட் சோம் கூறினார்.

“அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தின் போது,மிதமான அணுகுமுறையைப் பயன்படுத்துமாறும், ஒருவரையொருவர் மதிக்கவும் நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம்” என்று அவர் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version