Home Top Story இராணுவ டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலி

இராணுவ டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலி

குருண்:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின், தெற்கு நோக்கி 87ஆவது கி.மீட்டரில், இன்று மோட்டார் சைக்கிள், ராணுவ டிரக் மீது மோதியதில், தம்பதியினர் இருவர் உயிரிழந்தனர்.

இன்று மதியம் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் தம்பதியினர் சென்ற மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் உயிரிழந்தவர் ரிட்சுவான் சாலே (42) மற்றும் அவரது மனைவி ரோஸ்மாவதி இஸ்மாயில் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று 2.01 மணியளவில் அவரது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும் உடனே ஏழு உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர் என்றும் குவார் செம்பெடக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் பௌசி ராஸாலி கூறினார்.

“தீயணைப்புக் குழு அந்த நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளித்தத்துடன், மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தது,”இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்றும், அவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முஹமட் பௌசி தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version